தொடர் விறுவிறுப்பை கொண்டு ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை புரொமோ !!

Update: 2024-10-01 05:47 GMT

சிறகடிக்க ஆசை புரொமோ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இது விஜய் டிவியில் இரவு 9 - மணி அளவில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

ஒரு விஷயம் முடிந்ததும் இன்னொரு விஷயம் என கதையின் விறுவிறுப்பை குறைக்காமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை.

இந்த தொடரில் இந்த வார புரொமோ அந்த கடிதம் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடித்த முத்து, எதற்காக இந்த கடிதம் அனுப்புகிறார், அதற்கு பின் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பேன் என கூறிய நிலையில் இன்றைய எபிசோட் முடிவில் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது.

அதில், அண்ணாமலை வீட்டில் கொலு வைக்க விஜயா தனது கணவர் சொன்னதை நம்பி பாடுகிறார்.

அலைப்பாயுதே கண்ணா என்று பாடி அனைவரையும் தெரித்து ஓடலாமா என நினைக்க வைக்கிறார், அப்படி அவர் பாட அண்ணாமலை திடீரென ஒன்ஸ் மோர் கேட்கிறார். அதைக்கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் முழ்கி உள்ளனர்.

Tags:    

Similar News