டெல்லியில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்!!
டெல்லியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.;
நிலநடுக்கம்
தலைநகர் டெல்லியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். டெல்லியில் இன்று காலை 9.04 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தலைநகர் டெல்லி மட்டுமின்றி உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 9 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், ஹரியானாவின் குராவாரா பகுதியிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் இல்லை என கூறப்படுகிறது. பொருட்கள் சேதம், உயிர் சேதம் உள்ளிட்ட விவரங்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.