ரூ.200 கோடி சொத்துகளை நன்கொடை அளித்த தம்பதி !

ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடை அளித்துவிட்டு துறவறத்தை ஏற்ற குஜராத் தம்பதியினர்.

Update: 2024-04-16 07:01 GMT

நன்கொடை அளித்த தம்பதி

குஜராத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாதிபராக இருந்த பாவேஷ்-ஜினல் பண்டாரி தம்பதியினர் ரூ.200 கோடியை நன்கொடை அளித்துவிட்டு துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஜெயின் மத வழக்கப்படி துறவறம் மேற்கொள்பவர்கள் தீட்சை பெறுவது வழக்கம் என்பதால், தங்களது சொத்துக்களை துறந்து நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து தானம் பெறுவர்.

மொபைல் போன்கள், ஏர் கண்டிஷனர்கள் உட்பட அனைத்தையும் நன்கொடையாக வழங்கிய இவர்கள், இம்மாத இறுதியில் நடக்கும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக துறவு வாழ்க்கைக்குள் நுழைகின்றனர்.

Tags:    

Similar News