மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு!!

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-10-16 08:21 GMT

Mumbai fire accident

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மும்பை அந்தேரி மேற்கில் லோசந்த்வாலா வளாகம் உள்ளது. இங்குள்ள ரியல் பேலஸ் கட்டிடம் 14 மாடிகளை கொண்டது. அடுக்குமாடி குடியிருப்பான இந்த கட்டிடத்தின் 10-வது மாடியில் இன்று காலை 8.05 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தீயில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் தம்பதியான சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் அவர்களது வீட்டு உதவியாளர் பெலுபேட்டா (42) ஆகிய 3 பேரும் தீயில் கருகி பலியானார்கள். 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். ஏ.சி. எந்திரத்தின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Mumbai fire accident மும்பை தீ விபத்து உயிரிழப்பு

Tags:    

Similar News