''பாஜக 195-ஐ தாண்டாது.. 19 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்" - ம‌ம்தா ஆவேசம் !

Update: 2024-05-14 07:23 GMT

ம‌ம்தா பானர்ஜி 

பாஜக அதிகபட்சமாக 195 இடங்களைதான் கைப்பற்றும், மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று முதல்வர் ம‌ம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி குறைந்தபட்சம் 315 இடங்களையும், பாஜக அதிகபட்சமாக 195 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தார்.

மேலும் ''அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தனது பெற்றோரின் பிறந்தநாள் கூட தெரியாத நிலையில், அவர்களது சான்றிதழ்களை கேட்டால் எப்படி தரமுடியும். பெற்றோரின் சான்றிதழ்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இணைக்காவிட்டால் அனைவரும் வெளிநாட்டவர்களாக கருதப்படுவார்கள் என்றார். 50 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களின் சான்றுகளை கேட்டால், முதலில் பாஜகவில் இருப்பவர்களிடம் கேட்டு விண்ணப்பிக்க சொல்லுங்கள். பாஜகவினரே விண்ணப்பிக்காவிட்டால், மற்றவர்கள் எதற்கு விண்ணப்பிக்க வேண்டும்? இதனால், மேற்கு வங்கத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன்.'' என்று திட்டவட்டமாக கூறினார்.

Tags:    

Similar News