குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசித்தார் சந்திரபாபு நாயுடு!

Update: 2024-06-13 06:32 GMT

சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக 4-வது முறையாக பதவியேற்ற கையோடு நேராக திருப்பதி சென்று குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசித்தார் சந்திரபாபு நாயுடு. 

நேற்று இரவு தனது மகன் அமைச்சர் லோகேஷ் மற்றும் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் திருப்பதி வந்த அவரை விமான நிலையத்தில் திருப்பதி, சித்தூர் கலெக்டர்கள் பிரவீன் குமார், ஷன்மோகன், திருப்பதி மாநகராட்சி ஆணையர் அதிதிஷிங் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இஸ்தி கப்பால் மரியாதையுடன் அர்ச்சகர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வெளியே அவரை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் பக்தர் கொடுத்த மனுவை அவர் கனிவோடு பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News