'சிறிய இடையூறுகள் ஏற்பட்டால் கூட மோடி அரசு கவிழ்ந்துவிடும்' - ராகுல் காந்தி!

Update: 2024-06-18 07:40 GMT

ராகுல்காந்தி 

'மோடியின் முகம் எளிதாக உடையக்கூடியவை; சிறிய இடையூறுகள் ஏற்பட்டால் கூட அரசு கவிழ்ந்துவிடும்' என சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்திய அரசியல் நிலப்பரப்பில் ஒரு டெக்டோனிக் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, பிரிட்டனைச் சேர்ந்த Financial Times நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

'' தற்போதைய மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும்.

மோடியின் கூட்டணியில் "பெரும் அதிருப்தி" நிலவுகிறது; அங்குள்ளவர்கள் சிலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறைகள் நிகழாமல் நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால், இந்தியா கூட்டணி எந்த சந்தேகமும் இன்றி பெரும்பான்மையை வென்றிருக்கும்.

வெறுப்பையும், கோபத்தையும் பரப்பி, அதன் மூலம் பலனைப் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்திருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.''

Tags:    

Similar News