140 கோடி இந்தியர்கள்தான் என் குடும்பம்.. பிரதமர் மோடி பேச்சு !

Update: 2024-03-05 09:25 GMT

பிரதமர் மோடி

தெலங்கானாவின் சங்காரெட்டியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''இந்தியா புதிய உச்சத்தை  அடைந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில், உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியாவை நாம் உருவாக்குவோம். எனக்கு குடும்பம் இல்லை என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். முதலில் குடும்பம் தான் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நான் முதலில் தேசம்தான் என்று நம்புகிறேன். அவர்களுக்கு அவர்களுடைய குடும்பம்தான் எல்லாமே.என்னை பொறுத்தவரையில் என்னுடைய நாடுதான் எனக்கு எல்லாமே. அவர்களுடைய குடும்ப நலுனுக்காக அவர்கள் நாட்டை தியாகம் செய்கிறார்கள். நாட்டின் நலனுக்காக நான் என்னையே தியாகம் செய்துள்ளேன். குடும்ப ஆட்சி நடத்துபவர்கள், தங்கள் கறுப்புப் பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளைத் திறக்கிறார்கள். ஆனால் நான், ஏழைகள் ஜன்தன் கணக்குகளைத் தொடங்கி அவர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறேன். 140 கோடி இந்தியர்கள்தான் என் குடும்பம்".  இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News