டெல்லி முதல்வருக்கு இடைக்கால ஜாமீன் ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !

Update: 2024-05-10 10:25 GMT

 அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார்.

அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தொடர்ந்து மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை முடிவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags:    

Similar News