இந்திய ராணுவ வீரர்கள் மீது ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிவு!

Update: 2024-05-30 10:17 GMT

இந்திய ராணுவ வீரர்கள்

இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் மீது கலவரம், கொலை, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த செவ்வாய் (மே 28) அன்று குப்வாரா காவல் நிலையத்திற்குள் நுழைந்து இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் பலத்தக் காயமடைந்திருந்தனர்.

3 லெப்டினன்ட் கர்னல்கள் தலைமையிலான இந்திய இராணுவ வீரர்கள் குழு குப்வாரா காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து போலீசாரை கடுமையாக தாக்கியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News