வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்து களம் காண்கிறார் நரேந்திர மோடி !

Update: 2024-05-14 06:53 GMT

பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்

பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் களம் காண்கிறார். ஏற்கனவே 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி 3-வது முறையாக அத்தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

வாரணாசி தொகுதிக்கான வாக்குப்பதிவு 57 தொகுதிகளுக்கு 7-ம் கட்ட தேர்தலில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News