நீட், நெட் போட்டித்தேர்வு - உயர்மட்ட குழு அமைப்பு !

Update: 2024-06-22 12:00 GMT

ராதாகிருஷ்ணன் 

நீட், நெட் போட்டித்தேர்வு குளறுபடிக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்ததுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்தது. தேர்வுகள் வெளிப்படை தன்மை கொண்டதாகவும், நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா, ஒன்றிய அரசின் கல்வித்துறை இணை செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News