புதினிடம் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்!

Update: 2024-03-21 07:14 GMT

பிரதமர் மோடி - புதின் 

ரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் அதிபர் புதின் ஐந்தாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர உறவு ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல வேண்டும் என அதிபரிடம் வலியுறுத்தினார்.

மேலும் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு நம்மால் இயன்ற உதவியும் இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News