தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக முறைகேடு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Update: 2024-06-07 04:53 GMT

ராகுல் காந்தி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக திட்டமிட்டு முறைகேடுகள் செய்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ரூ.1000 கோடிக்கு பங்குகளை வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்களுடன் ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

''மோடியும் அமித்ஷாவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு யோசனை கூறியது ஏன்?

பங்குச்சந்தையில் நடத்துள்ள முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.

வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே கருத்துக்கணிப்பு மூலம் பாஜக வெற்றியைப் பூதாகரமாகக் காட்டியது ஏன்?

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ₹38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் லஞ்சமாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.'' என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News