திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியல் களத்திற்கான பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

Update: 2024-10-04 07:03 GMT

supreme court

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதில் சிபிஐ-யில் இருந்து இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள். ஆந்திர பிரதேச மாநில காவல்துறையில் இருந்து இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள். FSSAI-யின் மூத்த அதிகாரி ஒருவர் இருப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் களத்திற்கான பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம். அதை நாங்கள் விரும்பவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக வாதத்தின்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேக்தா, எஸ்ஐடி விசாரணையை மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலர் மேற்பார்வையிடட்டும், என பரிந்துரை செய்திருந்தார்.

Tags:    

Similar News