தேர்தல் பத்திர எண்களை வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-03-15 07:39 GMT

 உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான மேல்முறையீடு விசாரணையில் தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்ன எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பின்னர், தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறும் எஸ்பிஐ-வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை.

தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

தேர்தல் பத்திர வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எண்கள் வெளியிடாதது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையீடு.

மேலும், நாளை மறுநாளுக்குள் தேர்தல் பத்திர எண்களையும் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

Tags:    

Similar News