RSS தலைவர் மோகன் பகவத்தை சந்திக்கிறார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்!
Update: 2024-06-14 11:26 GMT
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை(ஜூன் 15) RSS தலைவர் மோகன் பகவத்தை சந்திக்கிறார் .
நாளை(ஜூன் 15) கோரக்பூரில் நடைபெறும் சந்திப்பின் போது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், 2019 மக்களவைத் தேர்தலில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இம்முறை 33 தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றி இருப்பது கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.
உண்மையான 'சேவகர்' ஆணவம் கொண்டவர் அல்ல என்றும், கண்ணியத்தைக் காத்து மக்களுக்குச் சேவை புரிபவர் என்றும் RSS தலைவர் மோகன் பகவத் பேசி இருந்தது சமீபத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.