வயநாடு நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 346 ஆக உயர்வு

Update: 2024-08-03 05:12 GMT

நிலச்சரிவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 346 பேர் உயிரிழப்பு.

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன. நவீன ரேடார்கள், லேசர் கருவிகள், டிரோன்கள் உதவியோடு காணாமல் போன 275 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

250 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ப்பட்டுள்ளது..

இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News