பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள்!

Update: 2024-06-07 11:13 GMT

பிரதமர் மோடி

வரும் 9ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்களாக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொள்ள உள்ளனர். வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில்வே ஊழியர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இலங்கை, நேபாளம், பூட்டான், வங்கதேசம், மொரிஷியஸ்ஆகிய நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருவது உறுதியான நிலையில் இன்னும் சில வெளி நாடுகளின் தலைவர்களும் வர உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News