போலி லாட்டரி விற்றதாக ஒருவர் கைது,

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-22 14:06 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், போலீசார் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சரஸ்வதி தியேட்டர் ரோடு, பெராந்தர் காடு பகுதியில் போலி லாட்டரி விற்பனை நடப்பது தெரிய வந்தது. நேரில் சென்ற போலீசார், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம், 26, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மூன்று எண்கள் எழுதிய வெள்ளை தாள்கள் 5 எண்ணிக்கை பறிமுதல் செய்தனர்.

Similar News