மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-25 16:09 GMT
வாழைப்பந்தலில் மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே வாழைப்பந்தல் பேருந்து நிலையம் அருகில் கம்யூனிஸ்ட் கட்சியின் கலவை வட்டார செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ரகுபதி, வட்டாரக்குழு உறுப்பினர்கள் என். ஆதிமூலம், கே. வெங்கடேசன், மு. வெங்கடேசன் உள்ளிட்ட கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும், மாதம் தோறும் மின்அளவு கணக்கீடு எடுக்க வலியுறுத்தி கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.

Similar News