மூதாட்டி மீது கார் மோதியதில் மூதாட்டி படுகாயம்

குமாரபாளையத்தில் மூதாட்டி மீது கார் மோதியதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

Update: 2024-08-13 08:19 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பெரியார் நகரில் வசிப்பவர் அம்சா, 48. கூலி. இவர் ஆக. 7ல் இரவு 09:00 மணியளவில் வேலை முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக, ராஜம் தியேட்டர் முன்பு சாலையை கடக்க சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது சேலம் சாலையில் வேகமாக வந்த மாருதி சுசுகி எக்கோ கார், இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் கார் ஓட்டுனர் வேமன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, 42, என்பவரை கைது செய்தனர்.

Similar News