புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி அருகே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வெளியே சாலையோரத்தில் அதிக அளவில் பல்வேறு வகையான குப்பைகளை பொதுமக்கள் கொட்டிச் செல்வதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதியுறுகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.