புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திடீரென பல கிளப் பார்கள் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர். இந்த பார்களில் பலர் அதிகமாக குடித்துவிட்டு, குடும்பங்களை பார்க்காமல் இருக்கிறார்கள். இதனை கண்டித்து புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சரக்குக்கு பல்லாக்கு தாலிக்கு பாடையா என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.