அன்னவாசல் அருகே பரம்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்வதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சாரல் பெட்டி கடையில் ஹான்ஸ், கூல்லீப், போதை பொருட்களை விற்ற கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.