விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

திண்டுக்கல் மின்மயானம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

Update: 2024-09-23 03:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மின் மயானம் பின்புறம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தாடிக்கொம்பு காப்பிளியபட்டி காலனி பகுதியைச் சேர்ந்த கபிலன் வயது 24 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதே போல,திண்டுக்கல், மேட்டுப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இன்னாசிராஜ் (எ) அலெக்ஸ் வயது 45 என்பவரை நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த ரெட்டியார்சத்திரம், சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த வீரணத்தேவர் மகன் மணிகண்டன் வயது 48 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News