பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற வருவாய்த்துறையினர்

குமாரபாளையம் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

Update: 2024-09-11 14:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செப். 18ல் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை வருவாய்த்துறை அலுவலர்களிடம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி துணை தாசில்தார் செல்வராஜ் வசம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். இதில் படைவீடு, பல்லக்காபாளையம், குமாரபாளையம் அமானி, குமாரபாளையம் அக்ரஹாரம் , சமயசங்கிலி, சவுதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்கள் கொடுத்தனர். ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஒ. முருகன், செந்தில்குமார், உள்பட பலர் உடனிருந்தனர். மனுக்களில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை முகாம் நடைபெறும் நாளில் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Similar News