இடையாத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று சங்கரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரேவந்த ஆதினிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராஜ்குமார் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.