வாணியம்பாடி அருகே வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

வாணியம்பாடி அருகே வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் நடவடிக்கை.

Update: 2024-09-25 12:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வட்டார தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் நடவடிக்கை. தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் முனிரத்தினம். இவர் பள்ளி தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளியை துவங்கும் போது பள்ளிக்கு பங்குதாரர் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் செய்தார். அதன் பேரில் ஒரு பங்கு 25 லட்சம் வீதம் சுமார் 100 பேரிடம் பங்குத்தொகையாக வசூலித்து பள்ளி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நாளிதழ் விளம்பரத்தின் அடிப்படையில் கிரீன் பார்க் கல்வி நிறுவனத்தில் முதலீடு தொகையை ஈட்டுவதற்காக நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் (67), ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா (59),இவரது கணவர் செல்வம் (65) ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களிடம் முதலீடை பெற்றுக் கொடுக்கும் இடைதரகர்களாக செயல்பட்டு உள்ளனர். இந்நிலையில் இடைத்தரகர்கள் மூலமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி ரூபாய் 85 லட்சம், மணி என்பவர் ரூபாய் 23 லட்சம், நாகராஜ் என்பவர் ரூபாய் 45 லட்சம், சாமுண்டீஸ்வரி தேவி பாலா ரூபாய் 25 லட்சம், சரவணன் ரூபாய் 25 லட்சம், இளங்கோ ரூபாய் 25 லட்சம், ஸ்ரீதர் ரூபாய் 20 லட்சம், ராமசுந்தரம் ரூபாய் 3 கோடியே 25 லட்சம், ராஜம் ஒரு கோடியே 75 லட்சம், கஜேந்திரன் 3 கோடி, சுரேஷ்குமார் 1 கோடியே 35 லட்சம் என மொத்தம் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை முதலீடாக பெற்று கிரீன் பார்க் பள்ளி தாளாளர் முனிரத்தினதமிடம் கொடுத்துள்ள நிலையில் அவர் பங்குதாரர்களுக்கு 7 வருடங்களாக முதலீட்டிற்கு உண்டான லாபம் மற்றும் ஈவுத்தொகை எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து முதலீட்டாளர்கள் தாளாளரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் பள்ளி தாளாளர் மீது தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும், சென்னை பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இதில் உண்மை என தெரிய வந்ததையடுத்து இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் தர்மபுரி குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் கைது செய்து நேற்று சிறையில் அடைத்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் முனிரத்தினம் தலைமறைவாக உள்ளார். இவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டார தொடக்க கல்வி அலுவலர் சித்ரா பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வித்துறை இயக்குநர் நரேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Similar News