ராசிபுரத்தில் பட்டப் பகலில் ஏ.டி.எம்.,மில் பெண்ணை ஏமாற்றி பணம் எடுப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு..

ராசிபுரத்தில் பட்டப் பகலில் ஏ.டி.எம்.,மில் பெண்ணை ஏமாற்றி பணம் எடுப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு..

Update: 2024-10-04 11:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமி பாளையம் பிள்ளாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகள் மனோரஞ்சிதம், 68. இவர் எலச்சிபாளையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று மதியம் ராசிபுரம் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கு முன்பு இருந்த சுமார் 35. வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நின்று கொண்டிருந்ததாகவும் மனோரஞ்சிதம் அவரிடம் பணம் ரூ.20 ஆயிரம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். மேலும் மனோரஞ்சிதம் அவருடைய ஏ.டி.எம்., அட்டையை கொடுத்து பின் நம்பரை கூறியுள்ளார் உள்ளார். ஏ.டி.எம்.,மில் பணம் வரவில்லை என்று கூறிய மர்ம நபர் அவர் மறைத்து வைத்திருந்த போலியான ஏ.டி.எம்., அட்டையை மனோரஞ்சித்திடம் திருப்பி கொடுத்துள்ளார். பின் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் மனோரஞ்சிதத்தின் செல்போன் எண்ணுக்கு ரூ.30 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி மூலம் தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனோரஞ்சிதம் சம்பந்தப்பட்ட ராசிபுரம் எஸ்.பி.ஐ., வங்கிக்கு சென்று மேலாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக மனோ ரஞ்சிதம் எஸ்பிஐ வங்கி கணகை முடக்கினர். மேலும் இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராசிபுரம் போலீசார் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் ஓய்வு பெற்ற அரசு அலுவலரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை அபேஸ் செய்துள்ள சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏடிஎம் கொள்ளையர்கள் பிடிபட்ட நிலையில் அதே எஸ்.பி.ஐ., ஏடி.எம்.மில்., பெண்ணிடம் பணப்பறிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News