மரக்கன்றுகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்கள்

சாலையோரம் உள்ள மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Update: 2024-10-04 11:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடம் அருகே அனுப்பட்டி பகுதியில் மர்ம நபர்கள் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி செல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றது.இதனை தடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை என்பவர் தலைமையில் மரக்கன்றுகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் வந்து துணை வட்டாட்சியரை சந்தித்து மரக்கன்றுகளுடன் மனுவையும் வழங்கினர்.உடனடியாக மரங்களை வெட்டி கடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்

Similar News