ராசிபுரம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவதி தண்ணீரை அகற்றும் பணி தீவிரம்..
ராசிபுரம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவதி தண்ணீரை அகற்றும் பணி தீவிரம்..
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர பகுதியில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. ராசிபுரம் அரசு மருத்துவமனை உள்பகுதியில் உள்ள பிரசவ வார்டு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மருத்துவமனை பணியாளர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் வார்டு பகுதியில் உள்ள நோயாளிகள் அருகே உள்ள வார்டு பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். ராசிபுரம் அரசு மருத்துவமனையானது மிகவும் பள்ளத்தில் அமைந்துள்ளது சாதாரண மலைக்கு கூட மருத்துவமனையில் வளாகப் பகுதிகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பிரிவு சாலை பகுதியில் சுமார் 100 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.. மேலும் இதே போல் ராசிபுரம் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் கனமழையால் இரவு நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டது. மேலும் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் சென்றதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது..