உடுமலை அருகே பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி எம்பி பங்கேற்பு

Update: 2024-10-10 16:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் பூசாரி நாயக்கன் குளம் உள்ளது இந்த குலத்தின் மூலம் 75 ஏக்கருக்கு மேல் பாசன வசதியும் குடிநீர் தேவைக்காக பல கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றன . கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் பாசனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை கால்நடைகளுக்கு குடிநீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர் . இந்த நிலையில் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரி நாய்க்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் தமிழக முதல்வர் இன்று தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பூசாரி நாய்க்கன் குலத்திற்கு இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது திறந்த விடப்பட்ட தண்ணீரை பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சுவாமி தலைமையில் விவசாயிகள் பொதுமக்கள் மலர் தூய் மரியாதை செய்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் எம் பி ஈஸ்வரர சாமி கூறும் போது ... இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் சாமிநாதன் மற்றும் திட்டக்குழு தலைவர்கள் விவசாய சங்கத்தினர் முயற்சியால் தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டிருப்பதாகவும் இந்த அரசு விவசாயிகளுக்கான அரசு என்பதற்கு இது ஒரு சான்று என்பதாகும் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு விவசாயிகள் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளம் செயற்பொறியாளர் விஜயசேகரன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மற்றும் பூசாரி நாயக்கன் குளம் பாசன சபை நிர்வாகிகள் காளிமுத்து , மற்றும் மாடர்ன் மகாலிங்கம் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

Similar News