சௌந்தராபுரம்- மது பாரில் தகராறு. பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு -

சௌந்தராபுரம்- மது பாரில் தகராறு. பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு -

Update: 2024-10-12 02:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சௌந்தராபுரம்- மது பாரில் தகராறு. பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு - சௌந்தராபுரம் அருகே மதுபான பாரில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு - மூன்று பேர் கைது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. நேற்று அக்டோபர் 10ம் தேதி இரவு அந்த மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டியைச் சேர்ந்த சேகர் (48).இவர் பூச்சி மருந்து தெளிக்கும் வேலை செய்து வருகிறார். ஹபீப் நகரச் சேர்ந்த லெனின் (31). பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். செல்லிவலசு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமரன் (48). தலையாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரகு (30) தனியார் சிட் ஃபண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் 4 நபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக இவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு, லெனின் என்பவர் சேகர் என்பவரை பீர் பாட்டிலால் வலது கையில் குத்தியதில், பலத்த காயம் ஏற்பட்டு பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேகரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து உயிரிழந்த சேகர் உடல், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, அரவக்குறிச்சி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News