கரூரில்,தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு.

கரூரில்,தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு.

Update: 2024-10-12 10:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில்,தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு. தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் மகளுமான சந்தன பிரியா பசுபதி பாண்டியன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு அமைப்பின் சார்பில் கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கரூர்- கோவை சாலையில் உள்ள என்.டி.எஸ் பிளாசா ஹோட்டலுக்கு வருகை தந்தார் சந்தன பிரியா பசுபதி பாண்டியன். அமைப்பின் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் ஆளுயுர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாவட்டச் செயலாளர் சந்தோஷ், சந்தன பிரியா பசுபதி பாண்டியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அமைப்பின் தொண்டர்கள், நிர்வாகிகள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிறகு, வெள்ளியணை பகுதியில் செயல்பட்டு வரும் ஆசிரமத்தில் அன்னதானம் வழங்குவதற்காக புறப்பட்டுச் சென்றார் சந்தன பிரியா பசுபதி பாண்டியன். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள், மேளதாளம் முழங்க தங்கள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Similar News