உடுமலையில் எல்.ஐ.சி முகவர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

Update: 2024-10-18 09:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு ஐ ஆர் டி ஏ ஆணையம் முகவர்கள் மீது வாழ்வாதாரத்தை பாதிக்க செய்யும் திட்டத்தை கைவிட கோரி மூத்த முகவர்கள் அலாவுதீன் லிங்குசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது எல்ஐசி அலுவலர் பிரேம்சந்த் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வாடிக்கையாளர்களின் போனஸ் தொகை அதிகரித்து தர வேண்டும் ,ஏற்கனவே நடைமுறையில் உள்ள கமிஷன் சதவீதத்தை தொடர்ந்து தர வேண்டும், முகவர்களுக்கான மெடிக்கல் கூறிய வயதை 80 ஆக அதிகரிக்க வேண்டும் , பாலிசிதாரர்களின் பாலிசி லோனுக்கு வட்டி வீகிதத்தை குறைக்க வேண்டும், முகவர்களுக்கு உரிய குரூப் இன்சூரன்ஸ் வயதுவரம்பு என்பதை அதிகரித்து தரவேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News