தொழில் பேட்டையில் மது போதையில் தன்னிச்சையாக சென்று தகராறு செய்து தாக்கியவர் கைது.

தொழில் பேட்டையில் மது போதையில் தன்னிச்சையாக சென்று தகராறு செய்து தாக்கியவர் கைது.

Update: 2024-10-24 04:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தொழில் பேட்டையில் மது போதையில் தன்னிச்சையாக சென்று தகராறு செய்து தாக்கியவர் கைது. கரூர் மாவட்டம், மேலப்பாளையம், முதலி தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது 26. இதேபோல தொழில் பேட்டை அருகே உள்ள முதலியார் செட்டியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அரிசி என்கிற முருகேசன் வயது 44. அக்டோபர் 22ஆம் தேதி காலை 8:30- மணி அளவில் தொழில்பேட்டை, ஓம் சக்தி காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள மது மெக்கானிக் கடை அருகே ஜனார்த்தனன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மது போதையில் வந்த அரிசி என்கிற முருகேசன் தன்னிச்சையாக சென்று தகாத வார்த்தை பேசி ஜனார்த்தனனை கத்தி மற்றும் நூல் கட்டரால் தாக்கி காயப்படுத்தி மிரட்டல் வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஜனார்த்தனன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஜனார்த்தனன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் தகாத வார்த்தை பேசி தாக்கிய அரிசி என்கிற முருகேசனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை காவலில் வைத்துள்ளனர்.

Similar News