குடும்பப் பிரச்சனையில் விஷம் குடித்து தற்கொலை

விஷம் குடித்து தற்கொலை;

Update: 2024-12-16 14:48 GMT
ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தோப்புபட்டியைச் சேர்ந்தவர் சின்னையா மகன் சித்திரைக்கண்ணு (42). இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த டிச.6ம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட குடும்பத்தினர் சித்திரைக்கண்ணை மீட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்திரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று டிச.16ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News