ஆலங்குடி அரசமரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை ஒரு வழி சாலையாக உள்ளது. இந்த நிலையில் இந்த தார் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த பள்ளங்களில் கட்டிடம் உடைக்கப்பட்ட கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால், காற்றில் தூசி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.