ஒரு வழி பாதையில் நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்களால் வாகன ஓட்டிகள் அவதி
ஒரு வழி பாதையில் நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்களால் வாகன ஓட்டிகள் அவதி;
ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது. இந்த நிலையில், அரசமரம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு ஒரு வழி சாலையில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து போலீசார் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.