வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா,பக்தர்கள் சுவாமி தரிசனம்

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா,பக்தர்கள் சுவாமி தரிசனம்;

Update: 2025-07-14 06:03 GMT
சித்தாமூர் கிராமத்தில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ் சாலை ஓரத்தில், பழமை வாய்ந்த வரசித்தி விநாயகர் திருக்கோவில் உள்ளது. கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பா பிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள், கடந்த 10-ம் தேதி துவங்கின. தொடர்ந்து கணபதி பூஜை. விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10:15 மணிக்கு கோவில் கோபுரத்திற்கும், 10:20 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின், வரசித்தி விநாயகருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சித்தாமூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழி பட்டுச் சென்றனர்

Similar News