குன்னத்தூர் கிராமத்தில் குடமுழுக்கு விழா.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள குன்னத்தூர் கிராமத்தில் ஸ்ரீ முத்து குமார சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோயில் கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.