சித்தாமூர் கிராமத்தில் மூன்று கோவில் கும்பாபிஷேகம்.
திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சித்தாமூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், கிராம தேவதையான ஸ்ரீ புலியம்மன் ஆகிய மூன்று கோயில்களில் அடுத்தடுத்து மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.