சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

போலீசார் விசாரணை;

Update: 2025-07-20 04:00 GMT
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி பவித்ரா(வயது 29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பவித்ரா வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் பவித்ரா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதனிடையே எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News