சேலம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-07-21 09:17 GMT
சேலம் குகை நெய்மண்டி அருணாசலம் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜகுரு (வயது 21). தங்க ஆசாரி. இவர் நேற்று மாலை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தில் இருந்து நெய்க்காரப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News