சேலம் மாவட்டம் வீராணம் அருகே கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் பிரேம்குமார் (வயது 30). இவர், உடல்நிலை சரியில்லாமல் கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த பிரேம்குமார், கடந்த 15-ந் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.