சேலம் கன்னங்குறிச்சியில் விஷம் குடித்து கறிக்கடைக்காரர் தற்கொலை

போலீசார் விசாரணை;

Update: 2025-07-26 03:27 GMT
சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது36). ஈரோட்டில் கறிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் ஈரோட்டில் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வசந்தகுமார் மனைவியிடம் கோபித்து கொண்டு கன்னங்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News