தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

போலீஸ் கமிஷனர் உத்தரவு;

Update: 2025-07-26 03:35 GMT
சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 33). இவரை கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்ததாக சேலம் டவுன் போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே டவுன் போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற வழக்கு பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை பரிசீலித்து முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார்.

Similar News