சேலத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

போலீசார் விசாரணை;

Update: 2025-07-26 03:45 GMT
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News