அரசம்பட்டியில் இபிஎஸ் தீர்ப்பை கொண்டாடிய அதிமுகவினர்.
அரசம்பட்டியில் இபிஎஸ் தீர்ப்பை கொண்டாடிய அதிமுகவினர்.;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையெட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அரசம்பட்டி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி ஒன்றிய கழகப் பொருளாளர் ராமன் கழக நிர்வாகிகள் பெரியசாமி, ராசு,வீரப்பன், செந்தில் குமார், ராஜப்பன், தயாளன், குமார், மாதேஸ் குமார், மற்றும் 50க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.